அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம் 0
– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தமையினால், அப் பிரதேசமெங்கும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது (இரவு 11.00 மணி) கடல் நீர் சுமார் 15 மீற்றர் வரை, நிலப் பகுதிக்குள் புகுந்துள்தாக அறியக் கிடைக்கிறது. இதேவேளை, நிலப் பகுதியை நோக்கி கடல் நீர் புகுந்துள்ளமையினைக் காண்பதற்காக, கடற்கரையினை நோக்கியும்