தாகம் 0
– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பலர் இருந்தனர். ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது.