இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு 0
இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது என்று, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அரசியல் என்பது மக்களின் உடைமை. ஆனால், இப்போது அது அப்படியானதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது மக்களாகிய நீங்கள் எதிர்க்கத் துணிகறீர்களோ, அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள்.