கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 0
கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில்