ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு 0
சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை, திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றமையானது 2002ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டியை காட்டிக் கொடுத்த செயற்பாட்டிற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினராக த் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை தனது முதலாவது உரையினை சபையில் ஆற்றினார்.