முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு 0
அம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வேளையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அறுகம்பே பிரதேசத்துக்கு அருகிலுள்ள குடாக்கள்ளி ஆற்றில் கைகளைக் கழுவுவதற்காக இவர் சென்றபோது, முதலலை இழுத்துச் சென்றுள்ளது.