பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி 0
சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற