விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி 0
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் – வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.