மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு 0
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுப்பவர்கள்தான், இந்தத் தேர்தலை பிற்போடுவது நல்லதென்று தன்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்து கூறுகின்றனர் என, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சில கட்சிகளின் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.