வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம் 0
வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், அந்த மக்களுக்காக நாங்கள் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.