ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு 0
காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன்