கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு 0
– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து, நபர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே, இந்த சம்பவம்