எஞ்சியிருந்த ஒரே தீர்வு 0
– முகம்மது தம்பி மரைக்கார் – எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை,