சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார் 0
கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, பத்து லட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களின் கைத்தொழில் துறையை ஊக்குவித்தலும் பொதியிடல் துறை விருத்தி செய்தலும் என்ற கருப்பொருளிலான அதிகாரசபையின் திட்டத்துக்கு இணங்க, அவர்களுக்கு நிதி உதவி