குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை
தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது.
பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 35,000 பவுண்கள் (இலங்கை நாணயப் பெறுமதியில் 73 லட்சத்து 63 ஆயிரத்து 872 ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தங்களது குழந்தைகள் செய்யும் வேடிக்கையான விடயங்களை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பகிருவதை பல பெற்றோர்கள் பழக்கமாக கொண்டுள்ள நிலையில், இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் அதிகமான வருவாயை ஈட்டலாம் என கூறப்படுகிறது.
குழந்தையின் 05 வயதிற்கு முன்பே, பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 200 புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்கிறார்கள் என்று பிரிட்டனில் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.