சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
– க. கிஷாந்தன் –
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி, துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் மேற்படி மூன்று நபர்களையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியமையினை அடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து இது குறித்து விசாரணை செய்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மேற்படி நபர்கள் 24, 32 மற்றும் 35 வயதான சகோதரர்களாவர்.