கணவன், மனைவி, இரண்டு மகள்மார்; கருகிய நிலையில் சடலமாக மீட்பு
கருகிய நிலையில் காணப்பட்ட நான்கு சடலங்கள் இன்று புதன்கிழமை காலை தெஹிவளை, கவ்டான பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டன.
ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்கள்.
கணவன், மனைவி மற்றும் அவர்களின் பதின்ம வயதுடைய மகள்மார் இருவரே இவ்வாறு கருகி மரணமடைந்துள்ளனர்.
அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்தமையினை அடுத்து, பொலிஸார் சலடங்களை மீட்டுள்ளனர்.