ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

🕔 March 12, 2016
Basil - 976ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“அமெரிக்காவிலிருந்து 2005ம் ஆண்டு இலங்கை வந்த பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

எனினும், பசில் ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் 10 ரூபா பணத்தைச் செலுத்தி சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றிருக்கவில்லை.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வருடாந்தம் தமது அங்கத்துவத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனினும் பசில் ராஜபக்ஷ, அவ்வாறு கட்சி உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ளவில்லை.

இவ்வாறான நபர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து, புதிய கட்சி அமைப்பது குறித்து பேசுவது ஆச்சரியப்படக்கூடிய வியடமல்ல” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்