இன ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மூவருக்கு கௌரவம்
இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும், ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக விஜித தேரர், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கரணாரத்ன மற்றும் மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்னாண்டோ ஆகியோரைக் கௌவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு கொழும்பு -10, மாளிகாவத்தை ‘இஸ்லாமிக் சென்டரி’ல் இடம்பெறவுள்ளது.
தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டுக்காகவும், சிறுபான்மையினரின் உரிமைக்காகவும் இவர்கள் – ௨ள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குரல் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் முஸ்லிம் – தமிழ் சமமூகங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அச் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மத அடக்கு முறைகள் தொடர்பில் மேற்படி மூவரும் உரத்துக் குரல் கொடுத்து வந்ததுடன், அதற்காக போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் – இவர்களுடைய மனித நேயத்தை பாராட்டியே – இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
சகல மதங்களுக்குமான சம சமமூக கூட்டமைப்பு, ஜனநாயகத்தின் குரல் மற்றும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஆகியவை இணைந்து, இந்த கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.