வேட்டை ஆரம்பம்: மஹிந்தவை சூழும் அபாய மேகம்

🕔 February 1, 2016

Mahinda - 0121
D
efusing momentum என்றொரு தந்திரம் உண்டு.

வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும்.

முதலில், ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்ப்பார்கள். sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation ஆரம்பிக்கும்.

அந்தத் தந்திரத்தினைத்தான் அரசு தற்போது கையாள்கிறது.

போரை வெற்றி கொண்ட மாயையில், ஒரு தசாப்த காலம் பெரும்பான்மை மக்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மஹிந்த ராஜபக்‌ஷ.

அவ்வாறான ஒருவரை over the night இல் கைது செய்து சிறையில் அடைப்பதென்பது பாரிய எதிர்வினைகளை உண்டாக்கும் என்கிற அச்சம் அரசியல் பரப்பில் உள்ளது.

கிரீஸ் பூதம் தொடங்கி அழுத்கம வரையிலான நிகழ்வுகள்தான், முஸ்லிம்களுக்குள் மஹிந்த விரோதப்போக்கை வளர்த்துவிட்டது.

ஆனால், தமிழர்களுக்கு மஹிந்த மீதான வெறுப்புக்கு வேறு பல அரசியல் காரணங்கள் உள்ளன.

இருந்தாலும், பெரும்பான்மையான சிங்களவர்களுக்கு இன்றும் அவர் ஹீரோவாகவே இருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை, தேசத்தை சுரண்டியமை பற்றியெல்லாம் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களில் அதிகமானோர் இன்னும் கவலை கொண்டதாக தெரியவில்லை.

ஆகவே, இவ்வாறான பின்புலமுள்ள அரசியல் தலைவரை மடக்கிப்பிடிப்பதற்கு, மக்கள் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு வலிய காரணத்தினை முன்வைக்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு உள்ளது.

சாதாரண நீதிமன்ற விசாரணைகளில் உள்ள தாமதம் , குற்றச்சாட்டுகளின் தன்மை, சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் என்ற வழமையான விசாரணைகளின் போக்கு என்பனவெல்லாம், மக்கள் எதிர்பார்க்கும் அவசரத்துக்கு மஹிந்தவை கைது செய்து, கூண்டில் அடைத்து விட ஒருபோதும் ஒவ்வாதவை.

ஆகவேதான் தேசத்துரோக குற்றச்சாட்டொன்றில் அவரை மடக்கிவிட புதிய உபாயம் ஒன்று வகுக்கப்படுகிறது.

அதுதான் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் வாக்களிப்பை தடுப்பதற்காக, புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பெருந்தொகை பணத்தினை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும், அதனை நிறுவுவதுமாகும்.

இதற்கிணங்க, முதலாவதாக FCID விசாரணைகளை முன்னெடுத்து, துரித கதியில் மஹிந்தவை கைது செய்துவிட இயலும் என அரசு நம்புகிறது.

இரண்டாவதாக, இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில், புலிகளை போரில் வென்ற தேசத்தலைவன் என்ற மாயை தகர்க்கப்பட்டு, மஹிந்த ஒரு தேசத்துரோகி என அவரது ஆதரவாளர்களே உணரத்தொடங்கும் ஒரு நிலையினை உருவாக்கிவிட முடியும் என்ற அரசியல் காரணங்களும் உள்ளன.

ஆகவேதான், சர்வதேச ரீதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான எமில் காந்தனை சரணடையச்செய்வதற்குரிய முயற்சிகளில் அரசு இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளதை இன்றைய செய்திகள் கூறுகின்றன.

பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்தவர் எமில்காந்தன். வடக்கில் வாக்களிப்பை தடுப்பதற்காக, புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பெருந்தொகை பணத்தினை வழங்கிய போது, அதற்கு தரகராக எமில் காந்தன் செயற்பட்டாரென்ற பிரதான குற்றச்சாட்டுகளும் உள்ளன.

எமில் காந்தன் சரண்டையும் போது, அவரது குற்றங்களுக்கான தண்டனைகள் தொடர்பில் ஒரு வகை compromise இற்கு வருவதன் மூலம், அவரை அரசதரப்பு சாட்சியாகவும் மாற்றி, ராஜபக்‌ஷவுக்கான ஆப்பினை செருகி விட தகுந்த சந்தர்ப்பமாய் அமையுமென அரசு காத்திருக்கிறது.

இலங்கை அரசியல் பரப்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் அதிர்வுகள் பாரிய சுனாமிகளை தோற்றுவித்து விடக்கூடும் என அஞ்சப்பட்டபோதும், அரசின் தந்திரோபாய நகர்வுகள் காரணமாக அமைதியான நீரோட்டத்தில் இலைகள் உதிர்வது போன்றதான சலனங்களையே அண்மைய கைதுகள் ஏற்படுத்தியுள்ளன.

ஆகவே, இறுதி இலக்கை நோக்கிய அரசின் பயணம் எதிர்பார்த்த கடினத்தை விட சுலபமாகி உள்ளமையினைத்தான் இப்போதைய போக்குகள் கோடி காட்டுகின்றன.

நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லவை நடக்கட்டும்.

தொடர்பான செய்தி: புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து

Comments

புதிது பேஸ்புக் பக்கம்