சிறுமி தூக்கிட்டு தற்கொலை

🕔 December 10, 2015

Death - 098– க. கிஷாந்தன் –

பொகவந்தலாவ, கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி எனும் சிறுமி (வயது 14) இன்று வியாழக்கிழமை பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி இன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி தற்கொலை செய்து கொண்டமைகான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லை.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கபட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்