தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான்

🕔 December 10, 2015

Thajudeen - 098
பி
ரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது என கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான ஏனைய அறிக்கைகள் கிடைத்தவுடன்,  தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் நீதவான் கூறியுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் முதலில் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் நீதிமன்ற மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்பிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான உத்தரவு இலங்கை மருத்துவ சபைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாஜுதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அத்துடன் சம்பவம் தொடர்பான சீ.சி.டி.வீ எனப்படும் கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகள் பற்றிய ஆய்வறிக்கையினை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் குறித்து விசாரணை நடத்துமாறும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்