Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்
– எம்.வை. அமீர் –
Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் நேற்று சாய்ந்தமருதுலீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக இவ்வாறாதொரு மாபெரும் கண்காட்சி இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும்.
Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியானது, கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் பங்குபற்றுதலுடன் நடைபெறுகிறது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில், சிரேஷ்ட கட்டிடக்கலை நிபுணர் எம்.ஐ.எம்.இஸ்மாயில், கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
Knowledge Force நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயிலின் கண்காணிப்பிலும் வழிநடத்தலிலும் ஆரம்பமான இந்நிகழ்வில், இலங்கையில் புகழ்பெற்ற புத்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் வழிகாட்டி அமைப்புக்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது காட்சிக் கூடங்களையும் வழிகாட்டல் அலுவலகங்களையும் அமைத்துள்ளன.
The biggest education, Job & Book Fair in the Eastern Province of Srilanka எனும் தலைப்பில், இந் நிகழ்வானது, நாளை ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது.
இப்பிரமாண்டக் கண்காட்சியானது மாணவர்களுக்கும், உயர்கல்வியை தொடரவுள்ளவர்களுக்கும், தொழில் வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், சிறந்த புத்தகங்களுடன் உறவாடவுள்ளவர்களுக்கும் வரப்பிரசாதமாகும்.