‘வார உரைகல்’ ஆசிரியர் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி சந்திப்பு

🕔 October 22, 2015

Puvi - 01மெரிக்காவினை தளமாக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் (HUMAN RIGHTS WATCH) சட்டம் மற்றும் கொள்கை பணிப்பாளர் (Legal & Policy Director) ஜேம்ஸ் ரொஸ் James Ross நேற்றிரவு ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை சந்தித்தார்.

இச் சந்திப்பு வார உரைகல் ஆசிரியரின் காத்தான்குடியிலுள்ள இல்லத்தில் இடம்பெற்றது.

‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருடைய வீட்டிலிருந்து கஞ்சா பொதியொன்றைக் கைப்பற்றியதாகக் குற்றஞ்சாட்டி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், பிரதம ஆசிரியர் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இவ்வழக்கின் முறைப்பாட்டாளரான முன்னாள் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரசன்னாவுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புவி. றஹ்மதுழ்ழாஹ்வினால் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் உரிய நிவாரணங்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், கோப்பிடப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக இதன்போது சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

‘வார உரைகல்’ பத்திரிகை மற்றும் இணையதளம் ஆகிய ஊடகத்தளங்களின் தோற்றம், நோக்கம், கடந்த காலங்களில் சந்தித்த இடர்பாடுகள், எதிர்ப்புக்கள், தாக்குதல்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது ஜேம்ஸ் றொஸ் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைகளைப் பேணும் கண்காணிப்பு ஆர்வலரான ருக்கி பெர்ணான்டோவும் வருகை தந்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்