300 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றினைப் பரப்பிய நபர் கைது; தெரிந்து கொண்டே செய்தாராம்

🕔 October 21, 2015

AIDS - 01ய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர், 300 பெண்களுக்கு அந்நோய்த் தொற்றினைப் பரப்பிய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரே, இவ்வாறு எய்ட்ஸ் (எச்ஐவி) தொற்றினைப் பரப்பியுள்ளார்.

31 வயதான மேற்படி நபர், தான் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினை அறிந்திருந்தும் கூட, எந்த விதமான பாதுகாப்பும் இன்றி, பெண்களிடம் உடல் ரீதியான உறவு வைத்துள்ளார் என அறியப்படுகிறது.

குழந்தைகளை பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் ஏற்றி செல்வதை பயன்படுத்தி, குடும்ப பெண்களுடன் இவர் உடல் ரீதியான உறவு வைத்துள்ளார் என தெரியவருகிறது.

மேலும், இவ்வாறு இவர் உறவு வைத்துக் கொண்ட பெண்களில் ஒரு தொகையினர், பாலியல் தொழிலாளர்களாவர்.

இவ்வாறு 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் எச்ஐவி தொற்றினைப் பரப்பியுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர், தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்