மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

🕔 October 11, 2015

Cow - 023மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை போலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

“தாக்கப்பட்டவர்கள், மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக வதந்திகள் பரவியிருந்தது. ஆனால் உண்மையில் ஏற்கனவே இறந்துவிட்ட மாடு ஒன்றின் தோலையே அவர்கள் நீக்கி எடுத்துக் கொண்டிருந்தனர்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த வாரத்தின் முற்பகுதியில், காஷ்மீர் மாநில சட்டசபையின் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், மாட்டிறைச்சி தடையை மீறி விருந்து ஒன்றில் மாட்டிறைச்சி உணவை வழங்கியதாகக் கூறி இந்தியாவின் ஆளும் பா.ஜ.க உறுப்பினர்கள் அவரை தாக்கியிருந்தனர்.

இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் பசுவை புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால் இந்துக்களில் பலரும் சிறுபான்மை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்