கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

🕔 April 18, 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளார் என்று, பொதுஜன பெரமுன  குற்றம் சாட்டியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

“ஜனாதிபதி தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெறவுள்ளது. அதில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதுடன், அதற்காக தமது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமையானது, அரசாங்கத்தின் கைகள் இதில் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது ”எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்