விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டனில் கைது

🕔 April 11, 2019

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டு ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஏழாண்டுகளுக்கு முன்பு – தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் கோரியிருந்தார்.

அசாஞ்சேவை கைது செய்த பொலிஸார், அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.

சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ”ஜூலியன் அசாஞ்சே தற்போது பொலிஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்