புற்று நோயால் கடந்த ஆண்டு மட்டும் 28 ஆயிரம் பேர் நாட்டில் பாதிப்பு
நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் புதிதாக, 28 ஆயிரம் பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளர் என்று, சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும், குறித்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 வருடங்களில், வருடாந்தம் இனங்காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 29.5 மில்லியனை விடவும் அதிகரிக்கலாம் எனவும் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.