பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார்

🕔 February 18, 2019

பிரதமர் ரணில் விக்­கி­ரமசிங்­க­வுடைய செய­லாள­ரை் ஒருவின் திருட்டுப் போன தொலை­பேசியை, யாழ்ப்­பாண நக­ரத்­தி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலி­ஸா­ர் மீட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்­பா­ணம் சென்றிருந்த போது, அவ­ரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்­தார். அதன்போது அவ­ரின் கைத்தொலை­பேசி அங்கு கள­வு போயிருந்தது. இது தொடர்­பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

இதனையடுத்து நீதி­மன்­றின் அனு­ம­தி­யு­டன் பொலி­ஸார் தொலை­பே­சி­யைக் கண்டுபி­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். இந்த நிலையில், யாழ்ப்­பாணம் நக­ரி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலை­யத்­தி­லி­ருந்து களவுபோன கைத்தொலைபேசி நேற்று மீட்­கப்­பட்­டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரி­யா­லை­யைச் சேர்ந்த ஒருவர், குறித்த  தொலை­பே­சியை விற்­பனை செய்திருந்தமை இதன்போது தெரி­ய ­வந்­துள்­ளது. இருப்­பி­னும் சந்­தே­க­ந­பர் இது­வரை கைதா­க­வில்லை.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலையி­லுள்ள சிசிரிவி கமராவில் பதிவான வீடியோக்களை வைத்து, சந்­தேக நபர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­கப் பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்