ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை

🕔 February 2, 2019

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் என்று, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘பாகுபாடுடைய ஜனாதிபதி மன்னிப்புக்கு இணங்க வேண்டாம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள் 252 பேர் கையொப்பமிட்டு, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்தக் கடிதத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேற்படி கடிதத்தில் பிரதமரின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கையொப்பம் இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்