வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்

🕔 January 24, 2019
– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில்  அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த  திருட்டுக்களுடன்  சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வழிப்பறி மற்றும்  நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.

இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையில், குறித்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய  ஒருவர் உட்பட கொள்ளையடிக்கும்    நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற மற்றுமொருவருமாக இரண்டு நபர்கள் இன்று வியாழக்கிமை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து  ஒரு தொகுதி தங்க நகை, ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட நகைகள்  சுமார் பத்து லட்சம் ருபா பெறுமதியானவை என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி  நகைத் திருட்டுக்கள் தொடர்பில் விசாரணையை  யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி எம். இமானுவேல் தலைமையிலான  குழுவினர்   மேற்கொண்டிருந்தனர்.

தற்போது மீட்கப்பட்ட   நகைகள்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை சைந்தேகத்தில் கைதான  குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால், அவருக்கு போதைப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைபடுவதாலேயே இவ்வாறு நகைக் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்