ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

🕔 January 22, 2019

– க. கிஷாந்தன் –

ஹெ
ரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்

இவர்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களாவர்.

இரண்டு பெண்களும், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற வேளையில், ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து குறித்த கார் இனை பரிசோதனை செய்த போதே, இரண்டு பெண்மனிகளிடம் இருந்து இந்த போதை பொருள் மீட்கபட்டதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்