துறைமுகங்கள், கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கடமைகளைப் பொறுப்பேற்றார்

🕔 January 14, 2019
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று திங்கட்கிழமை, அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் இந்நிகழ்வில் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, எஸ்.எம்.எம். இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்