பறக்கத்துள்ளா எழுதிய, ‘ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீடு

🕔 January 9, 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –

ல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துள்ளா எழுதிய ‘ ஏ.ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ எனும் நூல் வெளியிட்டு விழா, சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பாரியார் ஸொஹறா மன்சூர் முன்னிலை வகிக்க, கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூரின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இவ் நூல் வெளியிட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியின்
தலைவரும் , நகர திட்டமிடல் , தேசிய நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வில் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் நூல் ஆய்வுரையையும், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நூல் பற்றிய அறிமுகவுரையும் வழங்கவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்