அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ

🕔 January 8, 2019

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல, அரசியலமைப்பிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறினார்.

அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;

‘தற்போது அவசர அவசரமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவர சுமந்திரன் குழுமுயற்சித்து வருகிறார். புதிய அரசியலமைப்பில் ஒற்றையாற்சி நாடாகவே இலங்கை இருக்கும் என பிரதமர் தரப்பு – சிங்கள மொழியில் கூறி வந்தாலும் அதற்கு மாற்றமான ஒரு கருத்தினைசத்தான் சுமந்திரன் கூறி வருகிறார்.

அவசரமாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். பெரும்பான்மை மக்களின் பூரண விருப்பத்துடனேயே சிறுபான்மைமக்களுக்கு அதைகாரம் பங்கீடு செய்யப்பட வேண்டும். குறுக்கு வழிகளில் அதிகாரப் பகிர்வை செய்தால் அது ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாது.

தமிழ் கூட்டமைப்பு அரசியலமைப்பை எவ்வாறாவது நிறைவேற்றிக்கொள்ள, விடாப்பிடியாக உள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சி தலைவர்கள் மிகவும் கரிசனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

மாகாண சபை திருத்த சட்டத்தில் விட்ட தவறை அரசியலமைப்பில் விடக்கூடாது’ என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்