படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது
ராணுவம் மற்றும் விமானப்படையில் இணைந்து கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என, ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் எனக் கூறப்படும் நாமல் குமார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தி, தனக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலை இவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.