ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

🕔 September 21, 2015

Tiger - 02
– க. கிஷாந்தன் –

நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை ஒன்றினை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை மீட்டனர்.

ஆறு வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டதென, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டில் வேட்டையாடுவதற்காக வைத்திருந்த மின் கம்பியில் சிக்குண்டு, மேற்படி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுத்தையை மின்னேரியா கிரித்தலை பகுதியிலுள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பயிற்சி நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, நுவரெலியா – ஹக்கல வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி சந்தன அபேவர்தன தெரிவித்தார்.Tiger - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்