வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம்
🕔 December 22, 2018
– பாறுக் ஷிஹான் –
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.
நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே, பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால், வீதி போக்குவரத்தும் தடைப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை ராணுவத்தினர் மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதனால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடரும் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்காக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன. .இதனால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு கிளிநொச்சி பிராந்தியம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் கடும் மழை காரணமாக வட்டக்கச்சி, மாவடியம்மன், புன்னைநீராவி பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கனகராயன் ஆற்று படுக்கை, பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் 25.5 அடி காணப்படுவதால், கலிங்கு ஊடாக வான் 1.5 அடி பாய ஆரம்பித்துள்ளது.
எனவே அக்குளத்தை அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர்.
அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.
மழையுடனான காலநிலையின் போது சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது. கடும் மழை காரணமாக வீதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளநீர் காணப்படுகின்றது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.
நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே, பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால், வீதி போக்குவரத்தும் தடைப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை ராணுவத்தினர் மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதனால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடரும் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்காக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன. .இதனால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு கிளிநொச்சி பிராந்தியம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் கடும் மழை காரணமாக வட்டக்கச்சி, மாவடியம்மன், புன்னைநீராவி பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கனகராயன் ஆற்று படுக்கை, பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் 25.5 அடி காணப்படுவதால், கலிங்கு ஊடாக வான் 1.5 அடி பாய ஆரம்பித்துள்ளது.
எனவே அக்குளத்தை அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர்.
அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.
மழையுடனான காலநிலையின் போது சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது. கடும் மழை காரணமாக வீதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளநீர் காணப்படுகின்றது.