ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மஹா நிக்காயாவின் கோட்டே மகாநாயக்க தேரர் இத்தேபன்ன தம்மாலங்கார கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தான் செய்த தவறை ஞானசாரர் உணர்ந்துக்கொண்டுள்ளதால், எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகளுடன் ஞானசார தேரரையும் விடுதலை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியை, நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில், பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 06 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.