19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு

🕔 December 6, 2018

ஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்பத்தினரும் அரசியலில்  பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவுமே, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக, நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்காகவே, 19ஆவது திருத்தம் மிகவும் விரைவாகவும் சூட்சுமமாகவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும்போதே, அவர் இந்த விடயங்களை  தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஐக்கிய தேசியக்  கட்சியினர் 19 ஆவது திருத்தத்தினை தமக்கு  சாதகமாகவும், அதன் மூலம் தொடர்ந்து  நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தி, நிறைவேற்று அதிகாரத்தை  பலவீனப்படுத்தவுமே உருவாக்கினர்.

இதனால் ஏற்பட்ட பிரச்சினைதான் இன்னைய அரசியல் நெருக்கடியாகும். அரசியலமைப்புக்கு  பொருள்கோடல் செய்வதால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை தொடர்ந்த வண்ணமே காணப்படும். இதற்கு  பொதுத்தேர்தல்  ஊடாகவே  தீர்வு காண முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்