ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர்
நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டுமக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாக சீர்குலைக்கும் வகையில், அவர் செயற்பட்டு வருகின்றார் எனவும் சமந்தா கூறியுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சமந்தா பவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.