மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குகளின் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரியவருகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை ஆகியவற்றைப் பிரயோகித்து கலைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அகற்றப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.