மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

🕔 November 13, 2018

– அஹமட் –

பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால தடையுத்தரவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இறுதி தீர்ப்பல்ல எனவும் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் என, சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்