இலங்கையின் மிக வயதான நபர் மரணம்

🕔 November 12, 2018

லங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ஆண், கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார்.

காலி மாவட்டம், நாகொட – உடவெலிவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ‘கன்கனம் மஹத்தா’ என அழைக்கப்படும் எட்வின் விக்ரமாராச்சி என்பவரே, 112ஆவது வயதில் மரணமானார்.

இலங்கையில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபரான இவர், 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிறந்தார்.

எல்ஸி எவிபாலகொட என்பவரை திருணம் செய்த இவருக்கு 10 பிள்ளைகள் கிடைத்தனர். அவர்களில் 08 பேர் வாழ்கின்றனர்.

இவர் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி, சர்வதேச முதியோர் தினத்தன்று, இலங்கையின் வயது முதிர்ந்த நபர் எனும் வகையில் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை மரணமடைந்த இவரின் நல்லடக்கம் நேற்று இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்