நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

🕔 November 12, 2018

ரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இன்றைய தினம் மொத்தமாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்