உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

🕔 November 9, 2018

– மப்றூக் –

ச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘லங்கா ஈ நியுஸ்’ செய்தித்தளத்துக்கு கூறியுள்ளதாக, நாடு கடந்து வாழும் மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் சுனந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சுனந்த தேசப்பிரியவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையிலே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்