வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவற்றை செய்ய வேண்டுமாயின் தன்னை முதலில் கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்திலேயே, அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், “ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் ஆகும் நிலைமை வந்தால், நான் பதவியில் இருக்கமாட்டேன்” என்றும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க செய்த துரோகத்தின் காரணமாகவே, அரசியலில் இவ்வாறானதொரு முடிவை தான் மேற்கொண்டதாக, இதன்போது கூறிய ஜனாதிபதி; “மேற்குலகம் ரணிலை பிரதமராகக் கொண்டுவரும் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளது” எனவும் குற்றம் சாட்டினார்.
(தகவல் மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)