முன்னாள் அமைச்சர் அர்ஜுன கைது

🕔 October 29, 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை குற்றப் புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது.

பெற்றோலிய அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் மரணமடைந்தமையினை அடுத்தே, அர்ஜுன கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்சிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்