சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

🕔 October 15, 2018

–  முன்ஸிப் அஹமட் –

ம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.

கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்த தீர்வு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கரங்கா வட்டை  நெற் செய்கைக் காணிகளுக்குள் கடந்த சில நாட்களாக அத்து மீறி நுழைந்த சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு நெற்செய்கை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உழவு வேலைகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அத்து மீறி தமது காணிகளுக்கள் நுழைந்தோருக்கு எதிராக, அம்பாறை பொலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்படி சர்ச்சைக்குத் தீர்வு காணும் பொருட்டு கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் சிங்கள இனத்வர்களுக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, குறித்த காணிகள் அரசுக்குத் சொந்தமானவை என நினைத்தே, அவற்றினுள் தாம் நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டதாக, சிங்கள மக்கள் கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்து கொண்ட சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.

குறித்த பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு, சுமார் 68 ஏக்கர் காணிகளுக்குள், மேற்படி பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் வழங்கிய முழுமையான விபரங்களை ஒலி வடிவில் கேட்கலாம்

பிரதேச சபை உறுப்பினர் சஹீல் வழங்கிய தகவல்கள் – ஒலி வடிவில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்